2025 ஜூன் 28, சனிக்கிழமை

திருமலை பிரதேச மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


( ரமன்,
கஜன்)

சட்டரீதியற்ற சுருக்குவலை மற்றும் டைனமைற்களைப் பயன்படுத்தி; மீன்பிடியில் ஈடுபடுவோரை கைது செய்து சிறியளவு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் கடல்வளம் நாசமாக்கப்படுவதை தடுக்குமாறும் கோரிக்கை விடுத்து திருகோணமலை மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடற்தொழில், கடல்வளங்களைப் பாதுகாக்கும் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் திருகோணமலை ஏகாம்பரம் வீதியின் விஐப்த்தபுர பகுதியில் மாபெரும் வீதி மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ்,சிங்கள,முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

திருகோணமலை கரையோரத்தை அண்மித்து மீன்பிடியில் ஈடுபடும் சிறு அளவிலான மீன்பிடித்தொழிலாளர்கள், சட்டரீதியற்ற மீன்பிடி முறைகளை பயன்படுத்துவோரால் பெருமளவு பாதிக்கப்படுவதாக நீண்டகாலமாகவே முறையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தமக்கு உரிய அதிகாரிகள் அல்லது மீன்பிடித்துறை அமைச்சர் அல்லது பிரதி மீன்பிடித்துறை அமைச்சர் சரியான தீர்வை வழங்க வேண்டுமென்றும் அதுவரை வீதியை விட்டு நகர மாட்டோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகின்றனர்.

இன்று காலை 9 மணயளவில் ஆரம்பமான இவ்வீதி மறியல் போராட்டத்தினால் திருகோணமலையில் இருந்து ஏகாம்பரம் வீதியூடாக உப்புவெளி தொடக்கம் புல்மோட்டை வரை செல்லும் சகல வாகனங்களும் கண்டி வீதிக்கு திருப்பப்பட்டு பின் 3ஆம் கட்டை சந்தியூடாக பயணிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சட்டரீதியான முறைகளை பயன்படுத்தாதவர்கள் பெரும் பணக்கார முதலாளிகளாக இருப்பதால் அவர்களை தங்களால் நேரடியாக எதிர்க்க முடியாதுள்ளதுடன் அவர்கள் அரசியல் செல்வாக்குடையவர்களாகவும் உள்ளனர் என்றும் ஆர்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருந்தொகையான கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடத்திற்கு வருகை தந்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ந்ஐயந்த விஐயசேகர, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பிரச்சினை குறித்து கேட்டறிந்து கொண்டார்.படங்கள்:- ரமன்




You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 27 August 2012 05:07 PM

    செய்தியாளர்கள் புகைப்பட கருவியில் நேரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். 22.01 மணிக்கு இந்தளவு வெளிச்சம் கிடைத்திருக்குமா. அது 10.01 என புகைப்பட கருவியில் இருந்திருக்க வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .