2025 ஜூன் 28, சனிக்கிழமை

பிள்ளையான் முதலமைச்சராக நீடிப்பதற்கு த.தே.கூ. விரும்பியது, ஜனாதிபதி விரும்பவில்லை: செல்வராசா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
 
பிள்ளையான் கிழக்கு  மாகாண முதலமைச்சராக  தொடர்ந்து நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  விரும்பியிருந்தது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் அதனை  விரும்பவில்லை. ஆட்சிக்காலத்திற்கு  ஒரு வருடத்துக்கு முன்பே அதனைக் கலைத்து விட்டார் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

வடக்கு,  கிழக்கு  அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் கிழக்கு  மாகாணசபைத் தேர்தல் தொடர்பில்  ஏற்பாடு செய்த கூட்டம் திருகோணமலை நகரசபை  மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

1949ஆம் ஆண்டு தொடக்கம் கல்லோயா, கந்தளாய்க் குடியேற்றங்கள் மூலமாக  கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினர் குடியேற்றப்பட்டனர். தற்போது திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற  உறுப்பினர்களான இரா.சம்பந்தன்,  பா.அரியநேந்திரன், க.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி, எஸ்.அந்தோனிப்பிள்ளை  ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .