2025 ஜூன் 28, சனிக்கிழமை

'மூதூரில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டத்திற்கு இடையூறு'

Super User   / 2012 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                           (எம்.சுக்ரி)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று மாலை நடத்தவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டங்கள், வேறொரு கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களின் குழப்பத்தினால் இடைநிறுத்தப்பட்டதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பாக  அவர் தெரிவிக்கையில், 'மூதூர் பிரதேசத்திலுள்ள தோப்பூர் மற்றும் அக்கறைச்சேனை ஆகிய இரண்டு இடங்களிலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சார கூட்டங்கள் இன்று மாலை நடைபெறவிருந்தன.
இந்த பிரச்சார கூட்டங்களுக்கான முன் அனுமதியை முறைப்படி பொலிசார் எமக்கு தந்திருந்தனர்.

இந் நிலையில் இக் கூட்டங்களுக்கான ஒழுங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த சிலர் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனால் நாம் கூட்டத்தை இடை நிறுத்தினோம்.

இதையடுத்து கைரிய்யா நகரில் எமது கருத்தரங்கை நடாத்தவதற்கு பொலிஸ் அனுமதி பெற்றோம். ஆனால், அங்கு கூட்டத்தை நடத்த சென்ற போது அங்கும் இதே கூட்டத்தினர் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினர்' என தெரிவித்தார்.

இது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விரைவாக வெளியிடும் எனவும் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .