2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியா புஹாரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா புஹாரி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்...

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா புஹாரி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பிரதான வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியமையினால் பலத்த காயங்களுடன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே பிற்பகல் 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிண்ணியா 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 75 வயதான அப்துல் காதர் சமது என்பவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X