2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம், 'சேவ் த சில்ரன்'  ஆதரவுடன் திருகோணமலை பட்டணமும் சூழுலும் பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தது. 

'அகம்'  நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் க.லவகுகராஜா தஇலைமையில் திருகோணமலை குளக்கோட்டன்   கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் ரி.ரி.ஆர்.டி.சில்வா, பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஜலதீபன், கிழக்கு மாகாண சமூகசேவைத் திணக்களத்தின் பணிப்பாளர் ந.மணிவண்ணன், கிழக்குப் பிராந்திய 'சேவ் த சில்லரன்' அமைப்பின் முகாமையாளர் மார்க் பட்டிசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாற்றுத்திறனாளினளின் பாவனைக்கென பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .