2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஜாயா நகர் கிராம மக்களின் குறைநிறைகள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  ஜாயா நகர் கிராம  அலுவலகர் பிரிவிலுள்ள சிங்கள மீனவச் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

திரியாய் இராணுவ முகாம் இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் நிஹால் அபயகோனின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில், கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா கலந்துகொண்டு ஜாயா நகர் கிராம மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

ஜாயா நகர் கிராமத்திலுள்ள சிங்கள மக்களின் காணிப் பிரச்சினை, தங்குமிடம், குடிநீர், மீனவத் தொழிலைச் செய்வதற்கான வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை யுத்தத்தின் பின்னர் தொழிலின் நிமித்தம் இங்கு மீள்குடியேறியுள்ள சிங்கள மக்கள் முன்வைத்தனர்.

இக்கிராமத்தில்  மீள்குடியேறுவதற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமாயின், இடம்பெயர்ந்து சென்று வென்னப்புவ மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற குடும்பங்கள் இங்கு வந்து மீள்குடியேற  எதிர்பார்த்துள்ளதாகவும் இம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

ஜாயா நகர் கிராமத்திலிருந்து யுத்தம்  காரணமாக  இடம்பெயர்ந்து சென்ற சிங்களக் குடும்பங்களில் சுமார் 5 குடும்பங்கள் மீள்குடியேறி  தங்களது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடியை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 100 சிங்களக் குடும்பங்கள் ஏற்கெனவே இக்கிராமத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளதாக ஜாயா நகர் கிராம அலுவலகர் ஜே.முபாறக்  தெரிவித்தார்.

இந்நிலையில், மீள்குடியேற்றத்தினூடாக தங்களது வாழ்வாதாரத் தொழிலைத் தொடங்குவதற்கு வந்துள்ள சிங்கள மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பற்றி கடற்றொழில் மீன்பிடித் தொழிற்றுறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளின் கவனத்திற்கும் தன்னால் கொண்டுவர முடியுமென இம்மக்களிடம், கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா  தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஜாயா நகர் கிராம அலுவலகர் ஜே.முபாறக், குச்சவெளி சென். ஜோசப் தேவாலய பங்குத்தந்தை பிரான்சிஸ் லொயிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .