2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நில அளவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த உத்தரவு

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்,  ஏ.எம்.ஏ.பரீத்


புல்மோட்டை பிரதேசத்தில்  அரச நில அளவையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவினால் குச்சவெளி பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை பிரதேசத்தின் 14ஆம் கட்டை அரிசி மலை பகுதியைச் சுற்றி உள்ள சுமார் 500 ஏக்கர் காணியை நாக விகாரைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நில அளவை அரச நில அளவையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களது குடியிருப்புகள் பறிபோகும் என்று அஞ்சுகின்றனர்.

இந்த விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக  மாவட்ட செயலாளருக்கு கடிதம் மூலம் முறைப்பாடொன்றினை அவர் மேற்கொண்டிருந்தார். இந்த காணி நில அளவை சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை 19.08.2013 மாவட் செயலகத்தில் கலந்துரையாடமொன்று மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட செயலாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச  செயலாளர் உமா மகேஸ்வரன்இ பிரதேச  சபை தலைவர் அ.பி.முபாறக்இ பிரதேச  சபை உறுப்பினர்களான சல்மான் பாரிஸ் மற்றும்  எம்.பதூர்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது புல்மோட்டை பிரதேசத்தில் அரச நில அளவையினை தற்காலிகமாக நிறுத்தற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தீர்மானம் பற்றி பிரதேச  செயலாளருக்கு மாவட்ட செயலாளர் கடிதமொன்றையும் வழங்கியுள்ளார். இதன் பிரதிகள்  ஜனாதிபதி செயலகம் மற்றும்  அரச நில அளவையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தடையினையும் தாண்டி நில அளவை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் வீதிக்கு இறங்கி தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.  இது விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான ரீ.எம்.அன்வர், இம்ரான் மஹ்ரூப் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையினர் என பலர் உயர் அதிகாரிகளிடம் பேசி காணி அளவீட்னை நிறுத்தியுள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .