2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 16 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, பெரியகுளம் திருகோணேஸ்வரா வித்தியாலயத்தில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை நீக்கக்கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

பெரியகுளம், திருமால்புரம் மற்றும் கோணேசபுரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலையின் பிரதான கதவை அடைத்து தமது கோரிக்கையினை நிறைவேற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டத்தினையும் மேற்கொணடனர்.

அத்துடன் ஆசிரியர்கள் சிலரின் பொறுப்பற்ற நிலை மற்றும் ஆசிரியர்களின் சேவை நோக்கம் இன்மையை கண்டித்து இதன்போது கோஷங்கள் எழுப்பினர்.

இந்த விடயம் தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற பாடசாலைக்கு வருகை தந்த குச்சவெளி பிரதேச கல்வி பணிப்பாளர் கே.செல்வநாயகம் மற்றும் பிரதி வலய கல்விப் பணிப்பாளர் கே.அரியநாயகம் ஆகியோர் பெற்றோருடன் சமரச பேச்சில் ஈடுபட்டு பாடசாலையை திறந்தனர் .

தொடர்ந்து இன்னும் ஓரு வார காலத்திற்குள் இணைப்பு ஆசிரியர் ஒருவரை பெற்று அப்பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதுடன் கடமையை சரியான முறையில் செய்யாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .