2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சூடைக்குடாவில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், சூடைக்குடாவில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன மக்கள் குறைகேள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேராவும் மேற்படி மக்கள் குறைகேள் சந்திப்பில் உடனிருந்து மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

2006ஆம் ஆண்டு சம்பூர், சூடைக்குடாப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 85 குடும்பங்கள் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த மக்களுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை  சூடைக்குடாவில் நடைபெற்றது.

இதன்போது குடிநீர், வீதி, போக்குவரத்து, பாடசாலை மற்றும் வைத்திய வசதிகள், மீன்பிடிக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை இந்த மக்கள் முன்வைத்தனர்.

இவற்றுக்கு துரிதகதியில் தீர்வு பெற்றுத்தர தாங்கள் முயற்சி மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரனவும் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேராவும் உறுதியளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .