2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

உப்புவெளியில் தொழிற் பயிற்சி நிலையம் திறப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


திருகோணமலை உப்புவெளியில் நிர்மாணிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையம் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவிசாய கைத்தொழில் கால்நடை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

ஜெய்க்கா திட்டத்தின் நிதியுதவியின் கீழ் சேவா லங்கா மன்றத்தின் அனுசரனையுடன் இலங்கை தொழில் பயிற்சி திணைக்கள மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

9 மாத காலம் மேசன் மற்றும் ஓடாவி  போன்ற பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட 40 மாணவர்களால் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .