2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வீதி அபிவிருத்தி திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத்


தம்பலகாமம் பிரதேசத்தில் ஜெயிக்கா திட்டத்தினூடாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் கொங்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ள  வீதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

95ஆம் கட்டை, வைத்தியசாலை வீதி மற்றும் 98ஆம் கட்டை கிண்ணியா வீதி ஆகிய அபிவிருத்தித் திட்டங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

குறிப்பிட்ட வேலைத்திட்டங்களில் 95ஆம் கட்டை வைத்தியசாலை வீதியின் 3 கிலோமீற்றர் தூரம் 37.5 மில்லியன் ரூபா செலவிலும் 98ஆம்  கட்டை கிண்ணியா வீதியின் ஒரு கிலோமீற்றர் தூரம் 12.43 மில்லியன் ரூபா செலவிலும் கொங்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .