2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தென்னமரவாடி மக்கள் பாரம்பரிய காணிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது: தண்டாயுதபாணி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள திருகோணமலை, தென்னமரவாடி கிராமத்தின் மக்கள் தமது பாரம்பரிய காணிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முறையிடுகின்றனர் என்று கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி கூறியுள்ளார்.

நாட்டின் யுத்தம் காரணமாக, தென்னமரவாடி கிராமத்து மக்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டுமொத்தமாக வெளியேறினர். தற்போது படிப்படியாக மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுவரும் சூழ்நிலையில், அக்கிராமத்தின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதனால் தென்னமரவாடி கிராமத்தின் மக்கள் தங்களுடைய காணிகளை இழக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வில் அவசர பிரேரணை ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

காணி அதிகாரம் மத்திய அரசுக்கு உரியது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காட்டியே, மக்களின் பாரம்பரியமான காணிகள் பறிக்கப்பட்டுவருவதாக தண்டாயுதபாணி கூறினார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி, காணிகளை பயன்படுத்தும் அதிகாரத்தை மாகாணசபைகள் முழுமையாக அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி கிழக்கு மாகாணசபையின் காணி அமைச்சர், மகாவலி அதிகாரசபையுடனும் மத்திய அரச அதிகாரிகளுடனும் பேச்சுநடத்துவார் என்று உறுதியளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.(பிபிசி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .