2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொழுதுபோக்கு வசதியின்னைமே குற்றச்செயல் அதிகரிப்புக்கு காரணம்: எஸ்.எம்.சுபியான்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


'இளைஞர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு வசதிகள் இன்மையே சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கான காரணம்' என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எம்.சுபியான் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற புறநெகும திட்டத்தின் கீழ் 7.9 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள ஹமீதியா பொது விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வல் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மூவின மக்களும் ஒன்றாக வாழும் அதிகாரப் பிரதேசத்தையுடைய தம்பலகாமம் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் கல்வி, சுகாதாரம் பொழுதுபோக்கு உட்கட்டமைப்பு என துறை ரீதியாகவும் இன ரீதியானதுமான பங்கீடு பேணப்படுவது உறுதி.

கடந்த கால யுத்த சூழ்நிலையினால் இளைஞர்களின் பொழுது போக்கிற்கான வசதிகள் பாதிப்புற்றமையினாலேயே சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணமாகவுள்ளமையினைக் கருத்திற்கொண்டே விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் விருத்திக்காக  அதிகமான நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர்  ஆர்.கலீபுல்லா, விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .