2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மூதூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


மூதூர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 4 பரல் சோடாவும் உபகரணங்களும் தோணியொன்றும் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து  மூதூர் கங்கையாற்றுப் பாலத்திற்கு அண்மையாகவுள்ள நன்னிப்  பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபரின் ஆலோசனையின் பேரில் உபபொலிஸ் பரிசோதகர் ஆர்.பி.எம். லியனகே, உபபொலிஸ் பரிசோதகர் எஸ்.ரவிந்திர ராசா, சார்ஜன் எஸ்.எச்.நசீர் (43139), சார்ஜன் டிபிள்யூ.சூரிய ஆராச்சி (24427),  கொஸ்தால் கே.ஜனார்த்தன் (73668), கொஸ்தால் ஆர்.ராமநாதன் (89032) உள்ளிட்ட குழுவினரே இப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .