2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 4 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டள்ளது.

மேற்படி மீனவர்கள் 4 படகுகளில் வந்து புல்மோட்டை கடற்;பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்த நிலையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள்  நேற்று வியாழக்கிழமை மீண்டும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யபட்டு இருந்தனர்.

இந்நிலையில், மீனவர்கள் விடுதலை பற்றி சட்டமா அதிபர் திணைக்ளத்திடம் இருந்து அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறாமை காரணமாக இம் மீனவர்களை நீதவான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தர்.

எதிரவரும் 28ஆம் திகதி வரை மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .