2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத் 

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூ10ராட்சி மன்றங்கள் ஊடாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொரியா நாட்டின் கொய்கா (KOICA) அபிவிருத்தி நிருவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாஹ்க் கையூன் உறுதியளித்திருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்துக்கும் கொய்கா நிறுவனத்தின் பிரதிநிதி பாஹ்க் கையூமுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி இலங்கையில் உள்ள கொரிய நாட்டின் தூதரகத்தில்  இடம்பெற்றது. 

இச்சந்தந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.ஜெமீல் கல்முனை மாநகர சபையின் புதிய மேயர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் விசேடமாக மக்களின் வாழ்வாதார உதவிகள் உட்பட
யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரையில் மீள்கட்டமைப்பு செய்யப்படாத பிரதேசங்களுக்கு அடுத்த வருடம் முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததோடு இவ்வருடம் கொய்கா நிறுவனம் ஆசியா மன்றத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகணத்திற்கு வழங்கிய அபிவிருத்தி தி;ட்டங்களுக்கு மேலதிகமாக எதிர்காலத்தில் கூடுதலான பங்களிப்பை செய்யவேண்டும் என்று நிறுவனத்தின் வதிவிடப்பிரதிநிதியிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த நிருவனத்தின் பிரதிநிதி பாஹ்க், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆசியா அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையோடு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி உதவியினை வழங்க தான் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .