2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அகஸ்தியர் ஸ்தாபனத்தை புனரமைக்க அனுமதி

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

வரலாற்று சிறப்புமிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனத்தை புனரமைக்க திருகோணமலை மாவட்ட செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி.ஆர்.டி.சில்வா அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த பல வருடங்களுக்கு முன் விஷமிகளினால் உடைத்து சேதமாக்கப்பட்ட கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனத்தை புனரமைக்க ஆலய நிர்வாக சபையினர் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட செயலாளருக்கும் ஆலய நிர்வாக சபையினருக்கும் இடையில் கடந்த புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்தே புனரமைப்பு நடவடிக்கைக்கு மாவட்ட செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சூனிய பிரதேசமாக இருந்து வந்த அகஸ்தியர் ஸ்தாபனத்தின் தொன்மைகள் வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் உடைத்து நாசமாக்கப்பட்டதுடன் 2010ஆம் ஆண்டளவில் அகஸ்திய மாமுனிவர் வழிபட்டதாக கூறப்படும் மூலஸ்தான சிவலிங்கமும் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த புனரமைப்பு தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை ஆலய நிர்வாக சபையினருடன் ஆலோசனைக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .