2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தம்பலகாமம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவக் குழு நியமனம்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியானால் தம்பலகாமம் பிரதேசத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது அனர்த்த நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்காக பிரதேச சபைக்கான அனர்த்த முகாமைத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த கூட்டத்திலேயே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுக் கூட்டம் இன்று  சனிக் கிழமை இடம் பெற்றது.

குழுவினை ஆரம்பித்து தவிசாளர் உரையாற்றுகையில் 'தம்பலகாமம் பிரதேசத்தில் சூறாவளியினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பாரிய அளவில் அறிக்கை செய்யப்படவில்லை ஆயினும் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி மாதங்களில் வீசும் வடகிழக்குப் பருவக் காற்று மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கால விரிகுடாவில் உண்டாகும் சூறாவளி என்பவற்றினால் ஏற்படும் மழையினால் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்கள் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான அவசரகால நிலமைகளின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்கல், பொதுப் போக்குவரத்தினை இலகுபடுத்தல் மற்றும் பாதிப்புகளின் தன்மைகள் குறித்து உரிய திணைக்களுக்கு அறிவித்தல் என்பவற்றை முறையாக மேற்கொள்வதற்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதற்காகவே இக்குழவினை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .