2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின ஒன்றுகூடல்

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் மூதூர் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றுகூடல் இன்று செவ்வாய்க்கிழமை மூதூர் மல்லிகைத்தீவு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

பெண்கள் வலையமைப்பின் மூதூர் பிரதேச தலைவி சந்திர மலர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.நிஸார், மாவட்ட இணைப்பாளர் என். அன்ஜலி, ஆவணக்காப்பாளர் கே.ஜாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வன்முறைக்குள்ளான பலர் தமது சோகக் கதைகளை கண்ணீர் சிந்தியவாறு கூறியதானது ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களின் நெஞ்சை நெகிழச் செய்யது.

வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாகச் செல்வதும் குடும்ப தலைவரின் போதைவஸ்துப் பாவனையும் நவீன தொடர்பு சாதனங்களுமே பெண்கள் வன்முறைக்குள்ளாவதில் அதிக வாய்ப்பை ஏற்படுத்துவதாக   பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை வாழ்வாதாரமற்ற பெண்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு அரசாங்கமும் அரச சார்பற்ற நிருவனங்களும், தனிநபர்களும் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .