2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விவாதத்தை கூட்டமைப்பு புறக்கணிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், தேவ அச்சுதன், எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விவாதத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.கிழக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சிற்கான விவாதம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த விவாதத்தினையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு மாறாக தவிசாளர் ஆரியவதி கலபதி சபையை வழி நடாத்தி சென்றதை கண்டித்தே சபை புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சபையின் நேற்றைய நடவடிக்கைகளை மாலை ஆறு மணிக்கு முடிப்பதற்குக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்ட்டது. எனினும் ஏழு மணிக்கு நேற்றைய அமர்வை முடிப்பதற்கு ஆளும் தரப்பினர் எடுத்த முடிவை கண்டித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு சபை நடவடிக்கையினை வெளிநடப்பு செய்தனர்.

இதனால் சபையில் சற்று அமளி ஏற்பட்டது. எனினும் ஆளும் தரப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் சபை நடவடிக்கை கலந்துகொண்டனர்.இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணி கருத்து தெரிவிக்கையில்,

"கல்வி, காணி மற்றும் போக்குவரத்து என பல துறைகளுக்கு தனித்தனி புத்தகங்கள் தரப்பட்டன. அவற்றை வாசித்து விளங்கவே நேரம் போதாது. இந்த நிலையில் எமது தரப்பிற்கு ஒதுக்கப்பட்ட 2 மணித்தியாலங்களையும் வழங்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அது மாத்திரமின்றி காணி என்பது எமக்கு பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கின்றது. இந்த நிலையில் இவர்கள் அதற்கு போதுமான நேரம் ஒதுக்காமை என்பது எமது மக்களுக்கும் ஜனநாக ஒழுங்கிற்கும் முறையற்ற நடவடிக்கையாகும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .