2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் மூதூர் விஜயம்

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


மூதூர் கரையோர கிராமங்களில் எற்பட்டுள்ள கடலரிப்பை  தடுப்பதற்கு கல்வேலி அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்விற்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறியியலாளர் குழுவினர் நேற்று புதன்கிழமை மூதூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பொறியலாளர் பத்மசிறி தலைமையில்; வருகை தந்த குழுவினர்; ஹபீப் நகர், தக்வா நகர், பஹ்ரியா நகர் கரையோர கிராமங்களில் எற்பட்டுள்ள பாதிப்புக்களை நேரில் சென்று அவதானித்தனர்.

இக்குழுவினரோடு மூதூர் பிரதேச தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.சனூஸ், மூதூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அறபாத், கரையோர பாதுகாப்பு குழுவின் தலைவர் எஸ்.எச்.அமீர் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.

இதேவேளை, மூதூர் கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதூர் ஹபீப் நகர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.அமீர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மூதூர் பிரதேச சபை  தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், சிரேஷ்ட பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம், டாக்டர் வை.எஸ்.எம்.சியாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கரையோரக் கிராமங்களை பாதுகாப்பது சம்பந்தமாக ஆரோக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு முக்கியஸ்தர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக கரையோரப் பாதுகாப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அத்தோடு, கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான ஆரம்ப  களஆய்வை கையாள்வதற்கான உப குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

கரையோரப் பாதுகாப்பு குழுவில்   பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: எஸ்.எச்.அமீர், செயலாளர்: ஏ.எச்.லாபீர், நிதியாளர்: எம்.ஏ.எம்.றபீக், உப தலைவர் :கே.எம்.அஸ்ஹர், உதவிச் செயலாளர்: எம்.என்.முஸவ்பீர் ஆகியோரோடு கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான ஆரம்ப  கள ஆய்வை கையாள்வதற்கான உப குழு    சிரேஷ;ட பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம் தலைமையில்   அமைக்கப்பட்டது. 

மூதூர் கரையோரக் கிராமங்கள் சுனாமி தாக்கத்தின் பின்பு மிக மோசமாக கடலரிப்புக்கு உள்ளாகிவருவதோடு கடல் கொந்தளிபின் போது கடல் நீர்pனாலும் மூழ்கி வருகின்ற நிலையிலேயே கரையோரக் கிராமங்களை பாதுகாப்பதற்காக மூதூர் பிரதேச முக்கியஸ்தர்;கள் பலர் ஒன்றிணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .