2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துகொள்ள நடவடிக்கை

Kogilavani   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


பட்டதாரிகள் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால்; ஆசிரியர்களாக  சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். 

மட்டக்கப்பு, திருகோணமலை, கல்முனை அம்பாறை மாவட்டங்களில் சேவையாற்றுவதற்காக இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சைகள் 18ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு, அம்பாறை கல்முனை மாவட்டங்களில இந்நேர்முக பரீட்சைகள்  நிறைவுற்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்துக்கான நேர்முக  பரீட்சை திங்கட்கிழமை (23) மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கணிதம், விஞஞானம், தகவல்தொழிநுட்பம், உடற்கல்வி ஆகிய பாடங்களை பாடசாலைகளில் கற்பிப்பதற்காக இவ் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .