2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பயிற்சிமுடித்த தேசிய படையணி ​வெளியேற்றம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியா தேசிய இளைஞர் பயிற்சி படையணி முகாமிலிருந்நு மூன்றாவது கட்டமாக பயிற்சியை முடித்துக் கொண்ட 65 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை NVQ சான்றிதல் பெற்று வெளியேறினர்.
 
சான்றிதழ் வழங்கும் வைபவம் கிண்ணியா தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி கெப்டன் எம்.ரீ.ஜீவகுமார தலைமையில் நடைபெற்றது.
 
37 இளைஞர்களும் 28 யுவதிகளுமாக மொத்தம் 65 மாணவர்கள் தலைமைத்துவ, மொழி, கணினி உட்பட பல்வேறு உடல், உள, தொழில்சார் ரீதியான ஆறு மாதகால பயிற்சியினை பூர்த்தி செய்திருந்தனர்.
 
இந்த பயிற்சி நெறியின் சிறந்த மாணவனாக ஜி.சியாமனேஸூம் சிறந்த மாணவியாக ரீ.மர்ஜினாஸூம் தெரிவு செய்யப்பட்டனர். கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .