2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பரீட், ரீ.கே.றஹ்மத்துல்லா

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் ரூபா 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளித்தலும், புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சமமான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாகவும் இதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்  பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வின் போது வேதத்தீவு மீள்குடியேற்ற மாதிரி கிராமத்தில் 11 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 14.11 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட சஜாத் வீதி மற்றும் உள்ளுராட்சி திணைக்களமும், வீதி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து 1.6 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் கிணறுகள், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் 2 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வேதத்தீவு கிராம உள்ளக வீதிகள் என்பன மக்களிடம் கையளித்து வைக்கப்படவுள்ளன.

மேலும் 8.5மில்லியன் ரூபா நிதியில் வேதத்தீவு கிராமத்திற்கான மின் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கும் நிகழ்வு, வேதத்தீவு கிராம மக்களுக்காக 2.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கல், மூதூர், வேதத்தீவு கிராமத்திற்கான புதிய போக்குவரத்து சேவை ஆரம்பித்தல், வேதத்தீவு கிராமத்திற்கான பாலர் பாடசாலை ஆரம்பிக்கும் நிகழ்வு போன்றனவும் இதன் போது இடம்பெறவுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .