2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெடி விபத்தில் சிறுவன் காயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

விவசாய நிலங்களில்  ஊடுருவும் விலங்குகளை  கலைப்பதற்காக வெடியினை பயன்படுத்த முற்பட்டபோது, அந்த வெடி வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சந்தோசபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெய்யந்தை குளத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திலேயே நேற்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சந்தோசபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் விக்நேஸ்வரன் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளான்.

காயமடைந்த சிறுவன் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X