2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருமலை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் உண்ணாவிரதத்துக்கு முஸ்தீபு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 142பேர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவிக்கும் கடிதமொன்றை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கு கிடைக்கும் அற்ப வசதிகளுக்கு கண்டனம் தெரிவித்தே இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இலங்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக அவர்கள் இந்த கடிதத்தை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில், 'இலங்கைச் சிறைச்சாலைகளில் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வாறானதொரு நிலைமை இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதேவேளை, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மீனவர் பரிமாற்ற நடவடிக்கையின் பிரகாரம் இரு நாடுகளின் சிறைச்சாலைகளிலுமுள்ள மீனவர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .