2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யானைத்தாக்குதலில் மூதாட்டி மரணம்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மூதூர், கிழக்கு சின்னக்குளம் என்னும் இடத்தில் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி சந்தோசபுரம் என்னும்இடத்தைச் சேர்ந்த 70 வயதான தெய்வேந்திரம் இராசம்மா மரணமடைந்துள்ளார் என்று சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூரிலிருந்து தனது கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த போது அவரை வழி மறித்த மேற்படி தனியன் யானை தாக்கிக் கொன்று விட்டுச் சென்றுள்ளதாக பாட்டாளிபுரம் கிராம சேவையாளர் ஐ. உமாகரன் தெரிவித்தார்.

நிலக்கடலை, சோளம் போன்ற சேனைப் பயிர்களின்  அறுவடை ஆரம்பித்துள்ளதால் காட்டு யானைகள் பிற்பகல் 3 மணியிலிருந்தே மக்கள் வாழும் சேனைப்பயிர்ச் செய்கைப் பகுதிகளுக்குள் ஊடுருவ ஆரம்பித்து விடுவதாக கிராம சேவையாளர் ஐ. உமாகரன் மேலும் தெரிவித்தார்.

 இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்த சம்பூர் பொலிசார் சடலத்தை மூதூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .