2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கப்பல் நூல் நிலைய கண்காட்சி புதன் வரை நடைபெறும்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசசிக்குமார்


திருகோணமலை, அஷ்ரப் இறங்கு துறையில் தரித்து நிற்கும் லோஹோஸ் ஹோப் கப்பலில் உள்ள நூல் நிலைய கண்காட்சியினை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம வெள்ளி திறந்து வைத்தார்.

கப்பலில் பணியாற்றும் தொண்டர்களின்  கலாசார நிகழ்வுகளம் அரங்கேற்றப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுக்கு  கிழக்கு மாகாண  சபையின் உயர் அதிகாரிகளும். பாதுகாப்பு படை அதிகாரிகளும்,  அரச உயர்அலுவலர்களுமாக 117 பேர்  அழைக்கப்பட்டு இருந்தனர்.

127 மீற்றர்கள் நீளம் கொண்ட இக்கப்பல்  7 அடுக்குளைக் கொண்டது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 400 பேர் தொண்டர்களாக பணியாற்றுகின்றனர். இக்கப்பலில் நான்காவது தளத்தில் நுர்ல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள பார்வையிடுவதற்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை வரை இக்கப்பல் அஷ்ரப் துறையில் தரித்து நிற்கும்.

ஒரவருக்கு கட்டணமாக ரூ.50 அறிவிடப்படுகின்றது. சிறுவர்களுக்கும். பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களும் இலவசமாக இதனை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி இலங்கைதுறைமுக அதிகார சபையின்  அஷ்ரப் இறங்குதுறையின் பிரதான  நுழைவாயிலில் இருந்து  கப்பல் தளம் வரையான 2கி.மீற்றர் தூரத்திற்கு லோஹோ ஹோப் நிறுவனத்தால் இலவசபோக்குவரதது வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

 தனிப்பட்ட வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வளர்ந்தவர்கள் அடையாள அட்டையை எடுத்து வருமாறும் கேட்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் வெளியாரது வாகனங்கள் துறைமுக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை துறைமுக அதிகார சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .