2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்
 
விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று வெள்ளிக்கிழமை, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாடு பிரசேத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொலிஸார், குறித்த வீட்டை முற்றுகையிட்ட போது அங்கு விற்பனைக்காக ஒவ்வொன்றும் 25 கிராம் 220 மில்லி கிராம் எடையில் பொதி செய்யப்பட்ட 30 பக்கெட் கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து பொதி செய்ய பயன்படுத்தப்பட்ட பொலித்தீன் உறைகள், பொதி செய்யப்பயன்படும் உபகரணம் மற்றும் கஞ்சா விற்பனையின் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1900 ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் முந்தல் பொலிஸார் அவரை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .