2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஊஞ்சல் கயிறு இறுகி சிறுவன் மரணம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 08 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.பரீத்

கிண்ணியா காக்காமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அலி இப்னு முகமட் சனூஸ் (வயது 13) என்ற மாணவன் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

காக்கமுனை, சம்புக்குளம் வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் இம்மாணவனின் மரணம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

 ஜூம்ஆ தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றுவிட்டு வீடுக்கு திரும்பாமல்,தனது இரு நண்பர்களுடன் அயல்வீட்டுக்கு சென்று தோடம் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றை பிடித்து மரத்தில் ஏறி விளையாட முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .