2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருமலையில் கல்வியற் கல்லூரி அமைக்க தீர்மானம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலையில் கல்வியல் கல்லூரியொன்றை அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், மற்றும்; தகவல் தொழிநுட்பம் ஆகிய படங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இக்குறைபாட்டைப் போக்கும் வகையிலேயே இந்த கல்வியல் கல்லூரி நிர்மாணிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 121 பாடசாலைகளுக்கு தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் தொலைக்காட்சிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (08) திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ரீ.நிசாம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வை அடுத்து கல்வி அமைச்சருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே மேற்படி கல்வியற் கல்லூரி தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்படி கல்வியற் கல்லூரி அமைக்கப்பட வேண்டிய இடத்தையும் கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .