2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சிகள்

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத்திறன் விருத்தி பயிற்சிகள் கறுக்காமுனை, இலங்கைத்துறை, பூநகர், வெருகல் மற்றும் பூமரத்தடிச்சேனை ஆகிய பிரதேசங்களில் புதன்கிழமை (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சேவாலங்கா நிறுவனத்தின் வளவியலாளரான ஏ.எஸ்.மஹ்றூப் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கே இப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

இப்பயிற்சி நெறி தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'பாடசாலையில் கற்கும் உயர் வகுப்பு மாணவர்கள், பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டோர் மற்றும் உயர் கல்வியைத்; தொடர்வோர் என இந்த இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வாழ்க்கைத் திறன்விருத்திப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 

சமூக உறவுகள், முன்மாதிரி, தலைமைத்துவப் பண்புகள், தொடர்பாடல் திறமைகள், பிரச்சினைகளைத் தவிர்த்தல் போன்ற விடயங்களில் இவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளைப் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போதுவரை சுமார் 1000 இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .