2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருகோணமலை துறைமுகத்தில் சவுதி அராபியா குழுவினார்

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை துறைமுகத்தை 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது சம்பந்தமாக சாத்திய வளப்பாடுகளை பார்வையிடுவதற்கு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் சவூதி அரேபிய தூதுக்குழு இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து திருகோணமலை அஸ்ரப் இறங்குதுறையை பார்வையிட்டனர்.

சவூதி அரேபியாவின் சர்வதேச புகழ்பெற்ற கட்டிட நிர்மாண கம்பனியான சம்மோடி நிறுவனக் குழுவே இதனை பார்வையிட்டனர். இக்குழுவினர் சர்வதேச ரீதியில் புகழ் வாய்ந்த கட்டிடங்கள், உல்லாச விடுதிகள், துறைமுகங்கள், சவூதி அரேபிய மக்காவில் ஹரம் உட்பட பல்வேறு புகழ் வாய்ந்த கட்டிட நிர்மானங்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது உலகிலேயே அதி உயரமாக கட்டடமாக பெயர் பதிக்கவுள்ள கட்டடத்தை சவூதி அரேபியா ஜித்தாவில் நிர்மாணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .