2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அபிவிருத்தியின் இலக்குகளை எட்டுவதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்: பசில்

Menaka Mookandi   / 2014 மார்ச் 12 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைபேறான அபிவிருத்தி செயற்திட்டங்களின் இலக்குகளை துரிதமாக எட்டுவதற்கு அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்களென அனைவரினதும் பங்களிப்பும் அவசியமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

திருகோணமலை சிங்கள மஹா வித்தியாலய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நாட்டின் எழுச்சி எனும் தொனிப்பொருளில் தேசிய வரவுசெலவுத் திட்டத்தினூடாக திருமலை மாவட்ட அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விபரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க்ணடவாறு தெரிவித்தார்.
   
இக்கூட்டத்தல்கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, புத்தசாசன மற்றும் சமய விவகார பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்களென பலர் கலந்துகொண்டனர்.

அங்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில், 'தேசிய வரவு - செலவுத் திட்டமானது ஆண்டிற்கொருமுறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு இரகசிய நிதி அறிக்கை என்ற நிலைமை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில் இவ்வாண்டிற்கான வரவு  செலவுத் திட்டமானது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், பொதுமக்களென சகலரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டே தயாரிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் எமது அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியும் இதே ஒழுங்கில் 160 தேர்தல் தொகுதிகளுக்குமான விசேட கூட்டங்கள் நடாத்தப்பட்டே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சேருவில, திருகோணமலை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் 594 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்த பிறகு தேசிய வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் திருமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென இவ்வாறானதொரு பாரிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டமை இது முதற்தடவையாகும், எதிர்காலத்தில் இதனை மேலும் அதிபரிப்பதற்கு நாம் அனைவரும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரங்களை மென்மேலும் பலப்படுத்த வேண்டும்' என அவர் கேட்டுக்காண்டார்.

திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய மூன்று தெர்தல் தொகுதிகளுக்குமான நிதி ஒதுக்கீட்டு அறிக்கைகள் முறையே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், புத்தசாசன மற்றும் சமய விவகார பிரதியமைச்சுக் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோரிடம் கையளிக்கப்பட்டதுடன் மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டு அறிக்கை முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத் அவர்களிடமும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால்னால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .