2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஒட்சிசன் தடைப்பட்டதால் சுழியோடி மரணம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை, இலங்கத்துறை முகத்துவாரக் கடலில் வர்ண மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுழியோடி மீனவர் ஒருவர் ஒட்சிசன் தீர்ந்து போன நிலையில் மூச்சுத் திணறி மரணமடைந்து விட்டதாக சேருவில பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர் கேகாலைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான டபிள்யூ.ரத்னகுமார என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கைத்துறை முகத்துவார மீனவர் சங்கத் தலைவர் தவனேஸ்வரன் தெரிவித்தார்.

வழமை போன்று இப்பகுதிக் கடலில் வர்ண மீன்களைப் பிடிக்கும் சுழியோடிகள் இன்றும் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேற்படி மீனவர் சுவாசிப்பதற்காக பொருத்தியிருந்த ஒட்சிசன் சிலிண்டரிலிருந்து ஒட்சிசன் விநியோகம் தடைப்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மயங்கிய நிலையில் காணப்பட்ட அவரைக் கரை சேர்த்து வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போதே அவரது உயிரிழந்துவிட்டதாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலம் தற்போது வெருகல் பிரதேச ந்வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சேருவில பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .