2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாணவர்கள் இருவர் கௌரவிப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 24 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரி மாணவர்கள் இருவர் திருகோணமலை மாவட்ட மெய் வல்லுனர் சம்மேளத்தினாலகடந்த 22 சனிக்கிழமை திருகோணமலையில் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட மெய் வல்லுநர் போடடியில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ் வொன்று இன்று  24 திங்கட் கிழமை இடம் பெற்றது.

இதன் போது ரீ.எம்.ரொசான், ஏ.கே.எம்.சதீக் என்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இக் கல்லூரி மாணவர்களான ரீ.எம்.ரொசான் 19 வயது கீழ் 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை புரிந்தார்.

எ.கே.எம்.சதீக் 15 வயத கீழ் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை புரிந்தார்.

இக்; கல்லூரியிலிருந்து இந்த இரு மாணவர்களும் அகில இலங்கை போட்டிக்கு தெரிவு செய்து இக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ரீ.எம்.ரொசான் என்ற மாணவன் ஏற்கனவே 15 வயது கீழ் மெய்வல்லுனர் போட்டியிலும். 15 வயது கீழ் மெய்வல்லுனர் போட்டியிலும் மாகாண மட்ட சம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக் கௌரவிக்கும் நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஏ.ஆர்.எம்.உபைத்துல்லா சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .