2025 ஜூன் 26, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வு

Super User   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விசேட  நிகழ்வொன்று கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று(03)இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிண்ணியா நகரசபை நகரபிதா வைத்திய கலாநிதி ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேச செயலாளர் கிரிஸ்நேந்திரன், சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்வி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஒரு கட்டமாக  வைத்திய அதிகாரி அலுவலகத்திலிருந்து கிண்ணியா மத்திய கல்லூரி வரையிலான விழிப்பு ஊர்வலமும் இடம்பெற்றது.

'டெங்கு நோயினை ஒழிப்பதற்கு உங்களால் தான் முடியும்' எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதிவiர் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .