2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போலி இந்தியத்தாள்களுடன் எண்மர் கைது

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான போலி இந்திய நாணயத்தாள்கள் வைத்திருந்த எட்டு பேரை திருகோணமலை மாவட்டத்திலுள்ள லிங்கநகர் பகுதியில் வைத்து கிண்ணியா பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைக்காக  கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டள்ளனர்.

ஒரே இலக்கத்தை கொண்ட சுமார் 30 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களை இவர்கள் பரிமாற்ற முனைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .