2025 ஜூன் 25, புதன்கிழமை

தாக்குதலுக்குள்ளான உணவகத்தை கிழக்கு முதலமைச்சர் பார்வை

Menaka Mookandi   / 2014 ஜூன் 22 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள  உணவகமொன்று தாக்குதலுக்குள்ளான நிலையில், அந்த உணவகத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சனிக்கிழமை இரவு  சென்று பார்வையிட்டார்.

இவருடன் திருகோணமலை  தலைமையக பொலிஸ் பரிசோதகர் தயானந்த பிரபாத்தும்  மேற்படி  உணவகத்தை   பார்வையிட்டார். மேலும், இந்தச்  சம்பவத்தின்போது   ஊழியர்களின் கையடக்க தொலைபேசி கமெராவில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளையும் இவ்விருவரும் பார்வையிட்டனர்.
 
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட 08 பல்கலைக்கழக மாணவர்களும்;  திருகோணமலை நீதவான் தி.சரவணராஜா முன்னிலையில் அன்றையதினம் மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நாளை திங்கட்கிழமை (23) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .