2025 ஜூன் 25, புதன்கிழமை

உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீட்


திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும், கோட்டக் கல்வி அலுவலகம் பாலர் கல்வி வள நிலையங்களை வலுப்படுத்துவதற்கான தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்றும் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் கடந்த 3 ஆம் திகதி இடம் பெற்றது.

கிண்ணியா விஷன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ. ஆர். எம். சைபுள்ளாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார மற்றும் மாமட்டத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகளான முன்பள்ளி பாலர் பாடசாலை வலய இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கல்விக்கான நல்லாட்சி நிகழ்ச்சி திட்டம் அமுல்படுத்தப்படும் 13 பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தங்கள் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரச்சினைகளை செவிமடுத்த கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

விஷேடமாக பாடசாலைகள் எதிர் நோக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை இம்மாதத்திற்குள் முற்றாகத் தீர்த்துவைப்பதாக உறுதி அளித்தார்.

இப்பாடசாலைகளின் உள்ளகக் கட்டமைபட்பு வசதிகள் போன்ற தேவைகளை ஓரளவு தீர்ப்பதற்கு நடவடிகடகை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் குச்சவெளி, மூதூர், முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்வி காரியாலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தளபாடங்கள் செயலாளரினால் கையளிக்கப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தில் புதிதாக உறுவாக்கப்பட்ட வலய மட்ட பாலர் கல்வி வல நிலையத்திற்கும் தேவையான  உபகரணங்கள், தளபாடங்கள் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .