2025 ஜூன் 25, புதன்கிழமை

சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்

Kogilavani   / 2014 ஜூலை 18 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமும், கல்லூரி மட்ட தமிழ் மொழித்தின பரிசளிப்பு நிகழ்வும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை(18) நடைபெற்றது.

இந்நிகழ்வில், வலயக்கல்விப்பணிப்பாளர் ந.விஜேந்திரன்,  ஓய்வு நிலை அதிபர் கனக மகேந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .