2025 ஜூன் 25, புதன்கிழமை

பல்கலை மாணவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார் ,  எஸ்.சசிக்குமார்


கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் வைத்தியகலாநிதி.நா.வர்ணகுலேந்திரனை மீண்டும் முதல்வராக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்களால் திங்கட்கிழமை(28) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(29) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முதல்வர் வைத்தியகலாநிதி.நா.வர்ணகுலேந்திரன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவையின் முடிவின்படி கடந்த 23ஆம் திகதி முதல் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து திருகோணமலை பல்கலையின் சித்த மருத்துவத்துறை மாணவர்கள், தொடர்பாடல் மற்று மொழியியல் பீட மாணவர்கள் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள்  ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .