2025 ஜூன் 25, புதன்கிழமை

வீட்டுச் சுவர் விழுந்ததில் ஒருவர் பலி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா, குறிஞ்சாக் கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) காலை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல்லா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காக தனது வீட்டின் சுவரை இடித்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இவர் மீது வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்புலன்ஸ் வண்டியில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும்போது இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .