2025 ஜூன் 25, புதன்கிழமை

மௌலவியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவியின் ஜனாஸா  இன்று (13) மாலை 5.30 மணிக்கு கிண்ணியா குறிஞ்சாக்கேணி பொது மையவாடியில் பெருந்திரளான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது இறுதிக் கிரிகைகளில் நீநி அமைச்சர் றஊப் ஹகீம், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவுத்,  கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீ;த், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான எம்.எஸ்.உதுமா லெப்பை, ஹாபீஸ் நஸீர், எம்.ஐ.மன்சூர், விமலவீர திசாநாயக்க, தவிசாளர் ஆரியபதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஹாரிஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .