2025 ஜூன் 25, புதன்கிழமை

சமாதானத்தை கட்டியெழுப்புவதில் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவியின் பங்களிப்பு மகத்தானது : எம்.எ.எஸ்.உதுமாலெப

Thipaan   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிழக்கு மாகாணத்தில்  மூவினங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் சக வாழ்வையும் ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய ரீதியில் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி ஆற்றிய பங்களிப்பு மகத்தானது என்று கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எ.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

காலஞ்சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவியின் இறுதிக் கிரிகையில் கலந்து கொண்டு இன்று புதன்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

'சிறந்த மார்க்க அமைச்சராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்து திருகோணமலை மாவட்டத்துக்கு பல வழிகளிலும் சேவையாற்றியுள்ளர். ஏழை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அயராது உழைத்த ஒரு மாமனிதர். திருகோணமலை மாவட்டத்தில் ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் ஒன்றை  இஸ்தாபித்து அதன் மூலம் அனாதைச் சிறுவர்களுக்கான பராமரிப்பு  இல்லம் விதவைகளுக்கான சமூக மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை பல வருட காலமாக வெற்றிகரமாக அவர் நடாத்தி வருவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கடந்த 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் சபை முதல்வராக இருந்து மாகாண சபை சிறப்பாக இயங்குவதற்கு அளப்பெரிய சேவை செய்தவர். கிழக்கு மாகாண சபையில் இன ஒற்றுமைக்காக அவர் கொடுத் குரலை அவர் மறைந்தாலும் எங்களால் மறக்க முடியாது.

சமாதான சக வாழ்வுக்கு குரல் கொடுக்க எதிர்காலத்தில்  கிழக்கு மாகாணத்தில் அவரைப் போன்ற அரசியல் வாதிகள் உருவாக வேண்டும். அவரது சிந்தனையும் ஆற்றலும் மற்றைய அரசியல் வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். அன்னாரின் பிரிவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கின்ற இந்த மாவட்ட மக்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அவரது ஆத்ம சாந்திக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்' என் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .