2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹஸன் மௌலவியின் இழப்பு பேரிழப்பாகும்: கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுதாபம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

அரசியல் சக்தி பேதங்களை மறந்து சமூகத்திற்காக தான் வாழ்நாளில் பெரும் பகுதியை  செலவிட்ட பிரபல மார்க்க அறிஞரும் சமூக சேவையாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் எல்.எல்.எம். ஹஸன் மௌலவியின் மறைவு  இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு  மட்டுமன்றி இன நல்லுறவைப் பேணும் அனைத்து உள்ளங்களுக்கும் வேதனை  தருவதாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அச்செய்தியில், அரபு நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவை வைத்திருந்த  மர்ஹூம்  ஹஸன் மௌலவி ஏழை மக்களின் வாழ்வுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து கிண்ணியா, கண்டி, மற்றும் வரகாபொல  போன்ற பிரதேசங்களில் அநாதை  இல்லங்களை நிறுவி  ஏழைப் பிள்ளைகளின் வாழ்வுக்கு உதவியவர். சிறந்த பேச்சாளரான இவர், மார்க்கச்  சொற்பொழிவுகளை மணிக்கணக்காக பேசி கேட்பவர்களின் மனதை  மகிழவைப்பார்.

கிண்ணியாவில் கண்ணியமாக குடும்பத்தில் பிறந்த இவர்  பல்வேறு  அரசியல் கட்சிகளில்  பணியாற்றிய  போதும்  தனது சமூகத்திற்காக கூடிய பங்களிப்புச் செய்து திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, மூதூர், முள்ளிப்பொத்த hனை, தோப்பூர் மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை  உயர்த்துவதற்காக பல சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டார். அன்னாரின் மறைவை  ஈடுசெய்ய முடியாத அவரது குடும்பத்தவர்களுடன்  தானும் இணைந்து கொள்வதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .