2025 ஜூன் 25, புதன்கிழமை

சேருநுவரவில் வீதி விபத்து: இருவர் படுகாயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சேருநுவர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிஒலுவ மோடயா சந்தி பாலத்தின் அருகே  வெள்ளிக்கிழமை (22) மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவத்தையிலிருந்து சேருநுவர நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கால்வாய்க்குள் விழுந்ததால் விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகன சாரதி  டபிள்யூ. ரஞ்சித் (வயது  32) என்பவர் படுகாயமடைந்துள்ளார். அவருடன் பயணித்த  டிப்பர் வண்டியின் உதவியாளரான ருவான் லஸந்த (வயது 35) சிறுகாயங்களுடன்  அலிஒலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை சடுதியாக மழை பெய்ய ஆரம்பித்த போது வீதியில் வந்த இந்த வாகனம் விபத்துக்குள்ளானதாக, சம்பவத்தை நேரில் கண்ட  மக்கள் கூறினர்.

விபத்து தொடர்பான விசாரணையை  சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .