2025 ஜூன் 25, புதன்கிழமை

தமிழரசுக் கட்சியின் சேருவில தொகுதி உறுப்பினர்கள் தெரிவு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை சேருவில தொகுதிக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம், வெருகல் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றதாக வெருகல் பிரதேச சபையின் தலைவர் எஸ். விஜயகாந்த் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது சேருவில் தொகுதிக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

சேருவில தொகுதிக்கான கட்சிக் கிளை செயற்குழுவின் தலைவராக கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம், செயலாளர் சித்திரவேல் வணங்காமுடி, பொருளாலர்  கந்தசாமி கிருஷ்ணதாஸ், துணைத் தலைவர் சுப்பையா சின்னராசா, துணைச் செயலாளர் இராசதுரை நவப்பிரகாசம் ஆகியோருடன் வெருகல் பிரதேச சபையின் தலைவர் எஸ். விஜயகாந்த் உள்ளிட்ட 10 பேர் கொண்ட அணி செயற்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்ணசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான என். நாகேஸ்வரன், மற்றும் எஸ். ஜனார்த்தனன், திருகோணமலை நகரசபைத் தலைவர் கே. செல்வராசா, உப்புவெளிப் பிரதேச சபைத் தலைவர் இராமலிங்கம் விஜேந்திரன், வெருகல் பிரதேச சபைத் தலைவர் எஸ். விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .