2025 ஜூன் 25, புதன்கிழமை

அதிகாரபூர்வ மொழிக்கொள்கை அமுலாக்கம் : விக்கிரமசிங்க பாராட்டு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


 திருகோணமலை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும்  அதிகாரபூர்வ மொழிக்கொள்கை அமுலாக்கம் தொடர்பில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டத்தை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி எம்.எஸ்.விக்கிரமசிங்க சனிக்கிழமை (23) சென்று பார்வையிட்டு பாராட்டியுள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்செயற்றிட்டத்தை ஏனைய அரச நிறுவனங்களிலும் அமுல்படுத்த, திருகோணமலை வைத்தியசாலையை மாதிரியாக தமது அமைச்சு தெரிவு செய்துள்ளதாகவும் அத்துடன் எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் தேசிய மொழிக்கொள்கை அமுலாக்கம் தொடர்பான செயற்றிட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய மொழிக்கொள்கை செயற்றிட்டத்தின் வெற்றி பற்றிய விளக்கத்தை வைத்தியசாலையின் முன்னால் மருத்துவ அத்தியட்சகர் ஈ.ஐி. ஞானகுணாளன்  செயலாளருக்கு தெளிவுபடுத்தினார்.

 திருகோணமலை வைத்தியசாலைக்கு தேசிய மொழிக்கொள்கை செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த நிதி அநுசரணை வழங்கியிருந்த ஆசியா பவுன்டேசன் நிறுவனத்தின் அதிகாரிகள், வைத்தியசலையின் மருத்துவ அத்தியட்சகர், து.தவக்கொடிராஐா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .