2025 ஜூன் 25, புதன்கிழமை

கூட்டு நீர் தொகுதி மூலம் குடிநீர் வழங்கும் வைபவம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்

 
வரட்சியால் பாதிக்கப்பட்ட கிண்ணியா வலயக்கல்விப் பிரிவில் உள்ள கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்துக்கு கூட்டு நீர் தொகுதி மூலம் குடிநீர் வழங்கும் வைபவம் வித்தியாலய அதிபர் என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.
 
இதன்போது அமானா டகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கூட்டு நீர்த் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் இப் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் இரண்டாயிரம் மாணவிகளின் குடிநீhப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது.
 
இவ் வைபவத்தில் அமானா டகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பஷால் கபூர்இ பிராந்திய பணிப்பாளர் பவாஸ் பாரூக் மற்றும் நிறுவன ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .